புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான அற்புதமான வாய்ப்பு -Via. Sri Lanka Press Institute

பெண் புகைப்பட ஊடகவியலாளர்களாக பணிபுரியும் அல்லது புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான அற்புதமான வாய்ப்பு!இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச நிலையத்துடன் இணைந்து, பெண் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புகைப்பட ஊடகவியல் பற்றிய இலவச பயிற்சிபட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. புலிட்சர் பரிசு பெற்ற புகைப்பட ஊடகவியலாளரான ஜெசிகா ரினால்டி பயிற்றுவிப்பாளராக இணைந்து கொள்ளவுள்ளார். இப் பயிற்சி புகைப்பட ஊடகவியல் துறையில் உங்களின் திறமையையும் அறிவையும் மேம்படுத்தும்.திகதி: ஆகஸ்ட் 5 முதல் 7 வரைஇடம்: கொழும்பு (தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்)மொழி: ஆங்கிலம் (சிங்கள மற்றும் தமிழில் மொழிபெயர்ப்பு வழங்கப்படும்)பங்குபற்றுனர் எண்ணிக்கை மட்டுபடுத்தப்பட்டுள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே மின்னஞ்சலினூடாக தொடர்பு கொள்ளப்படுவார்கள். சிறந்த பயிற்சியினை பெற்றுக் கொள்ள இச் சந்தர்ப்பத்தினை தவறவிடாதீர்கள்!

பதிவு செய்ய இக் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது இவ் இணைப்பை இப்போதே கிளிக் செய்யவும்!https://forms.gle/GUmYKyu7D9cB6a6n7#Photojournalism#SLPI#FemaleJournalists#JessicaRinaldi#ICFJ#Workshop#Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *